Thursday, December 31, 2009

புத்தாண்டே வருக நிம்மதியைத்தருக

கழிகின்ற2009ம் ஆண்டு
காலனின் ஊழிக்கூத்தை
கனகச்சிதமாய் ஆடவைத்து
கலைந்து போகிறது.
வரும்2010ம் ஆண்டு
வலிகளைக்கழைந்து
புதியநம்பிக்கைகளை
ஈழத்தமிழன் வாழ்வில்
ஒளியேற்றும் ஆண்டாக
மலரவேண்டும் என்ற
ஆவல் எல்லோரதும்
எதிர்பார்ப்பாய் ஆகிறது
யாவருக்கும் என்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Friday, November 20, 2009

நவம்பர் 27ல்

இளமையைஅழித்துச்சாவினைஅணைத்த
மாவீரரை நினைவுகூருவோம்
ஈழத்தமிழரின் விடிவுக்காய் தம் கல்வியை
கைவிட்டமாவீரரைநினைவுகூருவோம்
எதிரியிடமிருந்து மண்ணையும்
மககளையும்காக்கவெந்துஆகுதியான
மாவீரரைநினைவுகூருவோம்
காமத்தைஅழித்து சாவின் குப்பியை
சுமந்த அம்மாவீரரைநினைவுகூருவோம்
வலிமைமிக்க தமிழர் படையை அழித்த
வல்லாதிக்கநாட்டால் மண்ணோடு
மண்ணான பல் ஆயிரம் சாவுக்கஞ்சா
மாவீரரை நினைவுகூருவோம்
நவம்பர் இருபத்தேளில் சாவினைத்
தழுவிய சந்தணமேனியரை
நினைவுகூருவோம்.

Monday, November 16, 2009

எங்கே கழுவுவாய் இந்தியாவே?

அடிப்படை உரிமைகாய்
களங்கண்ட ஈழத்தமிழரைக்
காரணமின்றி அனியாயமாக
அழித்தொழிக்க ஆரவாரம்
இல்லாமல் தோள் கொடுத்த
அயல்நாட்டுக்காரனே- உன்
கையில் நனைந்த ஈழ்த்
தமிழர் இரத்தத்தை
காயுமுன் களுவ எங்கு
செல்லுவாய் என்று
கூறுவாய் தும்பை விட்டு
வாலைப்பிடித்துள்ள
இத்தாலிய நாட்டுச்சிங்காரியின்
காலைக்கழுவும் அகில இந்திய
இல்லை இல்லை இஸ்லாமிய
காங்கிரஸ் கழுதைக்கூட்டங்களே.

Thursday, October 8, 2009

புதியவை கற்றல்

கற்பது நிற்பதில்லை என்னாளும்
கற்றது கைமண் அளவு கல்லாதது
உலகளவு என்று தப்பாமல் சொன்னாரே
கற்க்கால அவ்வைக்கிழவி.
இக்கால இளைஞரிடம் கற்பதற்கு
பல வுண்டு.முன்பு கற்றதெல்லாம்
முதியவரின் கடந்த கால அனுபவமே.
புதியவை கற்பதினால் மனஞாலம்
விரிவாகும் புத்துணர்ச்சி தலை
தூக்கும். கற்காத கணணி அறிவு
கற்பதினால் வலைத்தேடல் சுலப
மாகும் விஞ்ஞானம் தொழில்
நுட்பம் புலனாகும்.
இளம் உள்ளம் அனுசரிக்கும்
நட்புணர்வால் பல வருடம்
பின்னோக்கிப்போவீரே.
மனநலனும் உடல் நலனும்
முன்னேறும் வீண் வம்பளக்கும்
வயோதிபர்மடம் காலியாகும்.
இளவலுடன் புரிதலுடன்
நட்பு றவு ஏற்பட்டால்
மேற்ச்சொன்ன எல்லாமும்
நிஜமகும் என்பதை உணர்வீரே.

Monday, October 5, 2009

யார் அறிவார்

மூத்தபிள்ளைதான் மொக்குப்பிள்ளை
என்பார் அறியாதார்.
தந்தைக்குத்தோழ்கொடுப்பவனும்
இவனே
தம்பி தங்கைக்காய் உழைத்துக்கொடுப்
பவனும் இவனே
21 வயதில் இன்பம் காணும் தந்தை 35
வயது வந்தும் தனிமரமாய் நிற்க வைப்
பவனும் இவனே
மற்றவர் விருப்பு வெறுப்புக்கு மதிப்புக்
கொடுத்து தன்னை ஒறுக்குவனும்
இவனே
தம்பிமார் உயர தங்கைமார் வாழ்க்கைப்
பட எல்லாமானவன் உயராது ஏழ்மையில்
உழல்பவனும் இவனே
சமுதாயத்தின் குற்றச்சாட்டுக்குப்பதில்
சொல்லநிற்ப்பந்திக்கப்பட்டவனும் இவனே
இந்த பாழ்பட்ட சமுதாயம் என்று மாறும்
காயம்பட்டமூத்தவன் என்று மீள்வான்
யார் அறிவார்?

Sunday, September 20, 2009

ஏன் இந்தமோகம்

சினிமா மோகம் ஆட்டிப்படைப்பதால்
சீர் அற்றுப் போகிறது பல இளைஞர் வாழ்க்கை
கனவுத்தொழிற்சாலையின்மயக்கத்தால்
கனவாகிப்போன வாழ்க்கைதான் எத்தனை
ஒரே ஒரு திரையில் தோன்றும் கனவுக்காய்
ஒளிமயமான எதிர்காலத்தை அழித்தவர் எத்தனை
இளமைத்துள்ளலுடன் ஓடிவரும் இளவல்கள்
இளமையைத்தொலைத்து யார் யாருக்கோ அடிமையாய்
தாடி நரைத்து ஒட்டியவயறுடன் ஒரு சான்ஸ்சுக்காய்
வாடிச்சருகாய் சாலையோரம் வந்தவர் எத்தனை
பகட்டு வாழ்வினால் பயித்தியமான இளைஞர்களே
திகட்டும் சினிமா ஆசை தரப்போவது எதுவுமில்லை
நினைத்து மனம் வருந்துவதைத்தவிற்க இன்றே
நிலையான கல்வி நிகரற்ற பட்டங்களைத் தேடி
நிலையான வாழ்வுக்காய் களம் அமையுங்கள்.

Monday, September 14, 2009

[ காதல் சுகமானது ]

காதல் என்பது ஒரு சுகமான அனுபவமே
காதல் வருவதும் வாழ்வில் ஒரு முறைதானே
காதல் பல வருமானால் அது காம உறவுக்கானதே
காதல் தோற்கினும் பழிவாங்கல் தோன்றுவதில்லையே

ஆணின் காதல் மனதைவிட்டு என்றும் அழிவதில்லை
பெண்ணின் காதல் மன ஆழத்தில் உறங்கிவிடும்
உண்மைக்காதல் எல்லாம் மணமேடை ஏறுவதில்லை
கண்டதும் காதல் பெரும்பாலும் ஒருதலைக் காம உணர்வே

காதலுக்காய் நினைவாலயம் அமைத்தான் சாஜகான்
காதலுக்காய் முடி துறந்தான் எட்வேட் மன்னன்
காதலுக்காய் கல்லறையில் சமாதி ஆனான் ரோமியோ
காதலுக்காய் உயிர் கொடுத்தான் அம்பிகாபதி

எங்கிருந்தாலும் அவள் வாழநினைப்பது காதலே
மங்கையின் நிலைக்காய் மனம் வருந்துவதும் காதலே
சங்கையீனம் வராமல் தடுப்பதும் உண்மைக்காதலே
தங்கையாய் மதித்து மலர் சொரிவதும் காதலே.

Tuesday, September 8, 2009

நட்புக்குத்துரோகம்

மனமறிந்து பாபம் எதுவும் செய்யவில்லை
கனமான வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை
நிலையான குடும்ப பாரம்பரியத்தின் வாரிசு
விலைமதிப்பில்லா பெற்றோரின் நடுப்பையன்

தனியானவழிசமைத்து முறையாக கட்டிஎழுப்பிய
பலமான வியாபார சாம்ராஜ்யம் எனது சாம்ராஜ்யம்
கனிவான மனநிலையால் இலகுவாக பங்காளியானான்
நிலையான வாழ்வற்ற ஏழைக்குடும்பத்தலைமகன்.

வருடங்கள் ஓடின பங்காளியை மணமகனாக்க இனிமையான
குடும்ப உறவை துரிதமாகச் சமைத்துக்கொடுத்தான்
சாம்ராஜ்யத்தின் தலைமைக்கர்த்தா நடுப்பையன். நன்றிகள்
பலமாய்ச்சொன்னான் தாம்பத்திய்த்தில் நுளைந்த தலைமகன்.

நாடு கொந்தளித்தது இனங்கள் அழியத்தொடங்கின- வேற்று
நாட்டு மகள் மங்கல மங்கையானதால் பாதுகாப்புக்கு கேடு வருமுன்
நாடு விட்டு தாய் நாட்டுக்கு மங்கையை அனுப்ப நாள் குறித்தான்
தூய நட்புக்கு உயிர் கொடுக்கும் குணக்குன்று நடுப்பையன்.

நண்பன் கையில் சாம்ராஜ்யத்தின் திறவு கோல் திறம்பட
வியாபாரம் நடைமுறைக்குத்தோழ்கொடுக்க காலம்
காலமாய் பயிற்சி அளித்து உருவாக்கிய காசாளன். இவனுக்கு
உதவிட இளவல் ராஜுஎனப்பெயர் கொண்ட என் உயிர் நண்பன்

இன்று செய் நன்றிகளெல்லாம் மறந்து பண்புகள் காற்றோடுபோய்
நண்பனென நம்பி அளித்த எனது சாம்ராஜ்யத்தை தனது தனி
உடமை யாக்கி நடந்து வந்த வழி மறந்து சொன்ன சொற்களை
அழித்து சுயநலம் பெரிதாகி யார் நீ இந்த வியாபார சாம்ராஜ்யத்திற்கு
என என்னைக் கேள்வி கேட்கிறானே முருகா நீதியை நீயே சொல்

Friday, September 4, 2009

[ பாவிப்பயல் ]

அன்று பாட்டன் பூட்டன் போட்டசாதி விலங்கால்
மனிதரை மனிதராய் மதிக்கமறந்தோம்
பாகுபாட்டைக் கையில் எடுத்தோம்
வலிகளைக்கொடுத்தோம் திருந்தமறுத்தோம்
இன்று மெலியார் அதிகாரத்தில் மாற்றான்கை
கோர்க்கையில் மறுதலிக்கிறோம்
மனம் வெதும்புகிறோம் உரிமைக்கு கைகொடு
எனக்கேடகிறோம்
பட்டவலி அடிமனதில் எழுகையில் அதிகாரஞ்
செய்திடத்துடிக்கிறது மனது அதனால்
நீதி சாகிறது நிர்மூலமாகிறது தமிழ் மண்
பாவிப்பயல் மாறுவானா பாவப்பட்டமக்கள்
மீளுவாரா கர்த்தரே கருணை காட்டும்

Tuesday, September 1, 2009

[ விடையை யார் தருவார் ]

அப்பப்பா என்னே பயங்கரக் கொடுமை
தப்பு என்ன செய்தான் ஈழத்தமிழன்
உரிமையைத் தவிர வேறு எதைக் கேட்டான்
உலகில் நீதி செத்து தர்மம் அழிந்தது ஏன்
தார்மீகப்பேச்சு வெத்துவேட்டுப்பேச்சுத்தானா
பாரில் முதன்மை பெற்றது வியாபார சிந்தைதானா
ஈழத்தமிழனின் உயிர் மதிப்பற்றுப்போனதேன்
விட்ட தவறுகளை நோர்வே திருத்திக்கொள்ளுமா
மீளாத்துயிலிலிருந்து அய்நா மீண்டெழுமா
அமெரிக்கா தலைமத்துவத்தை நிலைநிறுத்துமா
ஆறாத்துயரிலிருந்து தமிழன் மீட்சி பெருவானா
ஆயிரம் வினாக்கான விடையை யார் தருவார்?

Thursday, August 27, 2009

[அற்புதவாழ்வு ]

பட்டப்படிப்பு படித்து என்ன...
கோட் சூட் அணிந்து என்ன...
பென்ஸ்ல் உலாவந்து என்ன...
சாப்பிடநேரமின்றி
தூங்க நேரமின்றி
குழந்தையைக் கொஞ்ச நேரமின்றி
தாம்பத்தியத்தைத்தொலைத்துப் பணம்
பணமென்று ஆலாய்ப்பறக்கும்
மனிதா
ஈற்றில்
நீ அடையப்போவதுதான்என்ன?!!!!
ஆசையைத்துறந்தால்
அற்புத வாழ்வைப்படைக்கலாம்.

Monday, August 24, 2009

[சுதந்திரம் யார் பெற்றார்]

சுதந்திரம் என்பது வெறும் வார்த்தைதானா
அன்று சூரியன் அஸ்தமிக்கா ஏகாதிபத்தியத்தின்
அடிமையாக இருந்தோம்
இன்று டெல்லிவாலாக்களின் ஏதேச்சாரத்திடம்
அடிமையாக இருக்கிறோம்.

தண்ணிரைத்தடுக்கும் அண்டை மாநிலக்காரனை
தட்டிக்கேட்க உரிமை இல்லாச் சுதந்திரம்
டெல்லியைத் தட்டிக்கேட்க தார்மீகவலுவற்ற
கொள்ளைகாரர் கையில் திறவு கோல்
கொடுத்த சுதந்திரம்

வேட்டிக்கும் சேலைக்கும் சோரம் போய்
வோட் போடும் சுதந்திரம்
சுதந்திரம் பெற்றோம் துகிலுரியப்பட்டோம்
அம்மணமாய் நிற்கிறோம் எமக்கெங்கே
இருக்கிறது சுதந்திரம்

தமிழர் சுதந்திரம் பெற்றார்களா?....
ஏமாந்த தமிழினமே ...
சிந்தித்துப்பார்.

Saturday, August 22, 2009

[காத்திரு காலச்சுவடு மாறும் நிலைவரை]

நேற்று நடந்த ஈழ உரிமைப்போரில்
மாண்டதமிழர் லட்சம் லட்சமாய்
நிராயுதபாணிகளாய் கேட்பார் அற்று.

ஒரு சின்ன இனக்குழுவை வேரோடழிக்க
ஒன்று பட்டது ஆசிய ஜொதி அமெரிக்கத்
தேவி சோசலிஸ்ற்வலையம் அகில உலகம்.

தனித் தனி நாடு தனித் தனி இனங்கள்
தலை எடுத்தாளச் சாமரம் வீசும் விந்தை
உலகம் தமிழன் முனையும் தனி நாட்டு
வாழ்விற்கு சென்னீர் ஊற்றும் முறைமை
புரியாப்புதிராம்.

ஆறு கோடித்தமிழர் வாழும் பூப்பந்துலகில்
தன்னைத் தானே ஆளத்தேவை ஒரு சிறு
நிலமே.

அய்நூறு ஆண்டுகால் அடிமை வாழ்வை
மீட்டிடத் திட்டம் போட்டான் கலிகாலக்
கரிகாலன்.

கொள்கைப்பற்று, நாட்டுப்பற்று,மொழிப்பற்று
தியாகப்பற்று எல்லாப்பற்றும் சங்கமித்து
களம் நிமிர்ந்தது ஈழமண் டலம்.

மூன்று சகாப்தம் முப்பரிமாணத்துடன்
கட்டம் கட்டமாய் காவியம் படைத்தான்
மானங்காத்த ஈழத்தமிழன்.

பாவியான பாரதத்துப் பேய் மகன் வேகமாய்த்
தொடுத்தான் சதிவலைப்பின்னலை.

ஈழத்தமிழனின் நிஜமாகி நிமிர்ந்த தனி
நாட்டரசை ஊழிக்கால நர்த்தனம் ஆடிச்
சிதைத்து அழித்தான் நீதி தேவனின்
தத்துப்பிள்ளை போல்.

மானத்தமிழன் மனக்குமுறலுடன் உறு மீன்
நிலை எடுத்தான் காலச்சுவடு மாறும்
நிலைக்காக.

[பாசம் எது வரை]

பெற்றவள் காட்டிடும் அற்புதப்பாசம்
தட்சணநாயகன் பற்றிடும்வரையாம்

அப்பன் போற்றிடும் புத்திரபாசம்
புத்திரன் மங்கையின் கைத்தலம்
பற்றிடும்வரையாம்.

அக்கையின் தங்கையின் அண்ணன்மேல்
பாசம் மட்டற்றசீர் தந்திடும்வரையாம்

அண்ணன்மார் தம்பிமார் கொட்டிடும்
பந்தமும் பாசமும் பண்டுப்பத்திரம்
செப்பிடும்வரையாம்

கட்டியமனையாள் காமக்கிளத்தியின்
காதலும் பாசமும் சட்டமுங்கட்டிலும்
ஆடிடும்வரையாம்

புத்திரன் புகழ்திடும் அப்பன் மேல்
பாசம் அப்பன் சொத்தினைப்பெற்றிடும்
வரையாம்

எத்தனை எதிர்வினை எற்பட்டபோதும்
ஈற்றினில்வருவது நட்பெனும் பாசப்பிணப்பாம்.

Monday, August 17, 2009

[ ஆண்டவா நீ இருக்கிறாயா?]

ஆண்டவா ஆண்டவா நீ இருக்கின்றாயா
நீ இருந்திருந்தால்மீண்டும் மீண்டும்
துன்பக்கேணியில் வீழ்த்தியிருப்பாயா
மாண்டவர்க்கெல்லம் நீகொடுத்தது
ஒரே விதியா-சின்னவாண்டுகள் செய்த
தவறுதான் என்ன ஆண்டவா அவர்கள்
கேட்பதெல்லாம்அன்பு பாசம்
அரவணைப்பு மட்டுமே
ஆண்ட உரிமையால் கேட்டதெல்லாம்
மீண்டும் தம்மை ஆழும் நிலை ஒன்றையே
பாண்டவர் போல் கேட்டது எம் இடம் மட்டுமே
வேண்டுபவர்கள் வேறு பட்டதால் ஆள்பவர்
பலம் பெற்றனரே
ஆண்டவா உன் மனம் இன்னும் இரங்கவில்லையே
ஆண்டு ஆண்டுகளாய் செய்த மாதவங்கள்
எல்லாம் தோற்கும் நிலை வந்துற்றதே
வேண்டுவதும் உன் அருள் ஒன்றையே-எம்மை
மீட்டிடும் இந்த துன்பக்கேணியிலிருந்து
மீட்டிடும் மருதமலையானே
மீண்டும் மீண்டும் தொழுகிறோம் மீட்டிடும்
எம்மை மீட்டிடும் மருதமலையானே

Thursday, August 13, 2009

[இன்னும் ஏன் தமிழன் மாறவில்லை]

ஆண்ட இனமாம் தமிழ் இனம்- இனி
மீண்டும் ஆளும் நிலை தோன்றுமா
வேண்டும் நிலைகுலையாத் தலைமை ஒன்று
தாண்ட எதுவித தடைகள் வரினும்
ஓங்குக புலம்பெயர் தமிழர் ஒற்றுமை
அங்காங்கே சில எட்டப்பர் தோன்றினும்
பாங்காக எமது உரிமைகள் உணர்ந்தால்
வீம்புக்காய் ஒலிக்கும் எதிர் குரல் மதிப்பற்று
மழைக்காலக் காளான் போல் மறையுமே
ஒன்றுபட்டால் உலகில் தமிழ் அரசு
குன்றில்இட்ட ஒளி விளக்காய் ஒளிருமே
ஒன்று படுவோம் ஒற்றுமை காப்போம்
ஒரு லட்சம் உயிர் பலிக்குரிய நீதிக்கு
உலக மன்றில் உரத்துக்குரல் ஒலிப்போம்
வேண்டுவது ஒற்றுமை ஒன்றே- தமிழா
வீம்பை ஒறுத்து மனந்திறந்து சிந்திப்பாயா?

Tuesday, August 11, 2009

புத்தன் என்ன சொன்னான்.

புத்தன் என்ன சொன்னான்
மகிந்தனே எண்ணிப்பார்
சாந்தம் கருணை காருண்யம்
என்றான் கவுதம புத்தன்
கொலை கொள்ளை கற்பழிப்பு
என்றான் கலிகாலப்புத்தன்
புலால் உண்ணாமை சிறந்த தத்தும்
என்றான் போதிமரப்புத்தன்
புலாலாகத்தமிழனைத்தின்பேன்
என்றான் புரட்டுப்புத்தன்
அரச முடியைத்துறந்து துறவறம்
போனான் ஆரியவம்ச சூரியக்குஞ்சு
அரசுரிமை தனி உடமை என் வம்சம்
அரசாளும் என்றான் பேரினவாதக்குஞ்சு
பரம்பரைக்கட்டமைபை வெட்டிச்
சாய்த்தான் சித்தார்த்தன்
பரம்பரைக்காய் களை எடுத்தான்
தன் கூட்டில் கரவலைப்புத்தன்
யார் புத்தன் யாரானாலும்
கோள் கொல்லும் காலம் வரும்.

Sunday, August 9, 2009

[காதல் யாசகம்]

பூவிலான பெண்மணி-என் மீது
காதல் கொள்ளடி மின்மினி
காதல் இல்லா வாழ்விலே
சாதல் நன்று இப்பாரிலே

காணும் காட்சி யாவுமே
களிகொள் மனதாய் மாறுமே
பேசும் வார்த்தைகள் யாவுமே
நேசம் கலந்ததாய் ஒலிக்குமே

கற்ற பாடங்கள் எண்ணிலா
முற்றுமழித்த கண்ணிலாள்
கனவு காணும் என்னிடம்
காதல் கொள்ளடி மின்மினி

மாலை சூடி மனை புகும்
வேளையில் காதல் கொள்ளடி
என்னவளே காதல் கொள்ளடி
கனிமொழியே காதல் கொள்ளடி.

Saturday, August 8, 2009

[நீ சொல்லுவாய் கிளியே]

மனம் என்னும் மேடையிலே
தினம் ஆடும் மா மயிலே-உன்
இதமான காதல் கண்டும்
சதம் போட முடியல்லே-என்
மனம் மெல்லாம் குருதி மழையிலே
இனம் சனம் மரணக்குழியிலே
புனர்ஜன்மம் பிறக்குமா
புதுக்குடில் ஏகுமா ஏகமாய்
பசிப்பிணி தீருமா தீற்கமாய்
துணி அணி சேருமா நேர்மையாய்
நிர் பய வாழ்வு நிலைக்குமா
இப்பரிதவிப்புத்தான் தீருமா- உன்
கைத்தலம் பற்றுவேனா யார்
சொல்லுவார் நீயே சொல் கிளியே.

Monday, August 3, 2009

[தமிழீழ வரலாறு]

சுயம் இழந்த தமிழர்கள்
சம உரிமைக்களம் அமைத்தார்.
பெரும் பான்மைத் திமிராலே
சிறுபான்மைக் கெதிரானான்.
தமதுரிமைப் போருக்காய்
படைசேர்த்தான் தமிழ்தலைவன்.
சுயலாபம் தலை தூக்க உள்
நுளைந்தான் அயல் நாட்டான்.
நரிக் கணக்கைச் சரிசெய்யப்
புறப்பட்டான் கரிகாலன்.
தனி அரசுக் கனவுகளால்
களம் சேர்ந்தான் பல இளவல்.
புறநாநூறுக் கதை எழுதிப்புகழ்
பூத்தான் தமிழ்த் தலைவன்.
அயல் நாட்டுப்பெருங்கனவு
பகல் கனவாய் ஆனதனால்.
தனிநாட்டுக்கட்டமைப்பைக்
கலைத்தழிக்கக், களம் புகுந்தான்
காந்தி தேசக்கொலைகாரன்.
பெரும்பான்மைத்தோழனுக்காய்
நிதி கொடுத்து மதி கொடுத்து
கடைசியில் அய்நா வில்
குரல் கொடுத்து
அழித்தொழித்தான் நிஜமாகும்
தமிழ் ஈழ தனி அரசை.

[ India is one of the country that
crushed the aspirations of the
Eelam Tamils]

Friday, July 31, 2009

பாடலா அது

பாட்டொன்று கேட்டேன்
பேச்சற்றுப் போனேன்
பேரிடி பெற்றேன்..பாடலா அது

என்னென்ன சொன்னான்
எப்புத்தப்பா சொன்னான்
பொருள் அற்றுச்சொன்னான்..
பாடலா அது

யார் யாரோ கட்டுறான்
சீர் அற்றுக் கட்டுறான்
பாட்டென்று கட்டுறான்..
பாடலா அது

கத்திறான் கத்திறான்
காதொடியக் கத்திறான்
கந்தசாமி கத்திறன்..பாடலா அது

கேட்கிறான் கேட்கிறான்
நாதி அற்றவன் கேட்கிறான்
பாடலென்று கேட்கிறான்..
பாடலா அது.

[ Recently south Indian Tamil
film's songs has no lyrical
precision in composing
songs]

Wednesday, July 29, 2009

[மழலை இன்பம்]

நின்முகம் தந்திடும் நிர்மலச் சிரிப்பு
தண் ஒளிவீசும் வெண்மதி தந்ததில்லை
உன் மழலைக்குரல் இனிமை
வேய்ங்குழல் இசை தந்ததில்லை
உன் தளர் நடைத்துள்ளல்
மென் பூங்கொடி அசைவிலில்லை
என் சிந்தை கவர் மதி
வேறு சிந்தையில் தோன்ற வில்லை

[In anything and every thing
the child's beauty is the best]

Sunday, July 26, 2009

[உறவுநிலை]

செல்வம் கல்வி சீரான வாழ்வு
கூடிடும்போது சேர்ந்திடும்
சுற்றம் விதி வலிமையால்
வாழ்வின் ஓர் காலை(செல்வம்)
ஓடிடும் போது ஓடியே போகும்
உற்றார் உறவு.

[ If you have money only
the relatives stays with you.]

Saturday, July 25, 2009

[சீர்கேட்கும் அவலம்]

இளம் மனதின் ஆசையெல்லாம்
சிலை வடிவம் பெற்றதில்லை
சிலை வடிவம் பெற்றதெல்லம்
கலைச்செல்வம் ஆனதில்லை

தலை மகனாய் அவதரித்தால்
தனியாசைக் கிடமில்லை
தாய் ஆசைப் படடோலை
சேய் ஆசையைச் சுட்டெரிக்கும்

பேராசைப் பெற்றவளால்
சீர்கெட்டது பல குடும்பம்
நூல் படித்துத் தலை நிமிர்ந்த
இக்கால இளவலுக்கு
சீர் கேட்டுச் சமர் பிறக்கும்
கற் காலப் பண்பாடு
எக்காலம் பலியாகும்
தப்பாமற் சொல்லுங்கள்
முக்காலம் உணர்ந்தவரே.

[பட்டோலை=நீணடகோரிக்கை.
கற்காலம்= பழையகாலம்
முக்காலம் உணர்ந்தவர்= கடவுள்]

{Asking Dowry destroy the
happiness of the couples}

Thursday, July 23, 2009

[பத்தர் கூட்டம்]

கோவில் மணி ஓசை கேட்டுக்
கோவில் போகும் ஒரு கூட்டம்
காலை வேளைப்பூசை காணும்
ஆவலில் கூடும் ஒரு கூட்டம்
மேள தாளத்துடன் தூங்கு
காவடியுடன் போகும் ஒரு கூட்டம்
ஆடல் பாடலுடன் ஓதுவார்கள்
பின் போகும் ஒரு கூட்டம்
எத்தனை கூட்டங்கள்
எங்கெங்கு கூடினும் அத்தனையும்
முருகன் பத்தர்கள் கூட்டம்.

Wednesday, July 22, 2009

[கோபம் ஒரு சத்துரு]

சினம் தரும் அழிவுகளை
அறிந்தவர்கள் ஒரு சிலரே
சினம் கொண்ட மனதிற்கு
மன அழுத்தம் குருதி அழுத்தம்
அத்தனையும் அதிகரித்து
மன நலனும் உடல் நலனும்
விரைவாகச் சீர்கெடுமே
மன்னிப்பதும் மறப்பதுவும்
நடந்துவிட்டால் ஏறியவை
இறங்குவதுவும் சீர்கெட்ட
உடல் நிலையும் மன நிலையும்
சீர் பெற்று உயர்வடையும்
எனத்தப்பாமல் சொன்னாரே
இக்காலப் பல அறிஞர்.

[ Anger is the destroyer of all
relationships. ]

[மனச்சுத்தம்]

சுத்தம் சுகம் தரும் மந்திரத்தை
அறிந்தவர்கள் எத்தனை பேர்
உடல் சுத்தம் அடைவதற்குப்
புனல் ஆடிப்பெற முடியும்
மனச் சுத்தம் அடைவதற்கு
வாய்ச் சுத்தம் வழி சமைக்கும்
மனச் சுத்தம் பெற்றவற்கு
பேராற்றல் வந்தடையும் என
முன்னோர்கள் சொல்லியதைக்
கடைப் பிடிப்பார் பயன் பெறுவார்

[மனமது சுத்தமனால் மந்திரங்கள்
ஓதவேண்டாம்]

[நட்புறவு மட்டுமே]

எத்தனை வேதனை எங்கிருந்து வந்தாலும்
தப்பாமல் உதவுவது நட்புறவுமட்டுமே
மற்ற உறவுகள் நிற்காமல் போகையிலே
பக்கபலமாய் நாம் இருப்போம் எனச்
செப்பாமல் உடன் இருப்பது நட்புறவு மட்டுமே
பட்டம் பதவி மட்டற்ற செல்வம் அத்தனை
போயினும் எட்டத்தில் போகாது
பக்கத்தில் நிற்பது நட்புறவு மட்டுமே
பற் பல செல்வங்கள் செட்டாகப்பெற்றாலும்
முக்காலம் முழுச்செல்வம் நட்புறவு மட்டுமே.

Monday, July 20, 2009

[அற்புதக்காதல்]

கண்டதும் காதல் வெறும்
கற்பனைக் கனவுநித்திரை
மீண்டால் நிச்சம் புரியும்
நித்திலமீதிலே.

அற்புதக்காதல் கைப்பிடி
வேள்வியில் நிச்சயமாகி
குப்பென் மலர்ந்து உறவுகள்
புரிந்து உயிரிலில் கலந்து
நிரந்தரமானது

பெற்றவர் உற்றவர்
மற்றவர் மகிழ்ந்து முப்
பொரி தூவிமுத்திரை
பதித்து அம்பலமானது

பற்பல மேகங்கள் அப்பப்ப
சூழிலும்நிச்சயமாக இணை
பிரியாதது அற்புதக்காதல்

Sunday, July 19, 2009

காக்க யார் வருவார்

நட்டநடுப்பகலில் நாலகலம்
வீதியிலேஇஷ்டப்பட்டுத்
துகிலுரியப்புறப்பட்டான்
இத்துஷ்டன்

தட்டிக்கேட்கநாதி இல்லா
இந்நாட்டில்தட்டிக்கேட்ட
குணமகனைக்கொன்று
விட்டார் எட்டப்பர்கூட்டங்கள்
ஒன்று சேர்ந்து.

கட்டைப்பஞ்சாயத்து காமக்
களியாட்டம்கொடிகட்டிப்
பறக்கும் இந்நாட்டில்
நீதி செத்து நெடுநாளாய்
போனதனால்.

குன்றில்குமரன் மனம்
வெறுத்துவேற்றுக்கிரகம்
குடிபுகுந்தான்அதனால்
இப்போ எம்மைக்காக்க
யார் வருவார் கச்சி
ஏகம்பரே.

இறைவன் இருக்கிறானா

நட்டநடுக் காட்டில் நாலு பக்கம் வேலிகட்டி
கொட்டக் கொட்ட விளித்துக் காவல் புரியும்
இஷ்டப்படி சுட்டுத்தள்ள உரிமை பெற்ற
இலங்கை இராணுவம்.கஷ்டப்படு நன்றாக
கஷ்டபடுஎனச்சபிக்கப்பட்ட ஈழ்மக்கள்
இரக்கப்பட யாரும் அற்ற நிலைகண்டு
பொங்கி எழுந்த புலம் பேயர்ந்த தமிழ் மக்கள்
காப்பாற்று காப்பாற்று எனக்கேட்டபோதும்
கண்டும் காணாது போல் நடித்த பன்னாட்டு
அரசு அதிகாரிகள் அயல் நாட்டுச்சந்தைக்காய்
ஆதர்வுக்கரம் நீட்டத்தயங்கும் ஒபமா நிர்வாகம்
ஏதும் அறியா முள் வேலிக்குள் பொங்கி அழும்
ஏழைக்கண்ணீரால் கட்டப்பட்டநீச்சல் தடாகம்
பசிக்கொடுமையால் பலியாகும் பச்சிளம் பாலகர்
மூச்சற்றுப் போகும் முகமறியா முதியோர்கள்
காவல் நாயால் கற்பழிக்கப்பட்ட இளம் கன்னிகள்
இத்தனை நடந்தும் எதிர் வினை விளைவிக்காத
இறைவன் என்றொருவன் இருக்கிறானா எனச்
சொல் என் அன்புத்தோழா

Saturday, July 18, 2009

ஈழவன் சாபம்

பட்டம் பதவி பல் கோடிச் சொத்துக்காய்
பரிதவிக்கும் ஈழ மண்ணைப் பலி
கொடுத்து பதவி பித்துப்பிடித்து
உளறும் கிழக் கருணாநிதியே
நீ ஊழ் பிடித்து கூர்கெட்டு துகில் அற்று
வாய் கோணி பரிதவிக்க க்கடவாய் என
நான் இடும் சாபம் பலிக்க வேண்டும் என்
தென்கோடி இறையனாரே.

தோழன் மடல்

காரணம் யாதோ தோழா மாதம்பலவுமாகி-உன்
காகிதம் காணவில்லைஊரிலும் ஒன்றுமில்லை

வீரியம் மிக்க ஈழ மக்கள் ஆரியக்கொலைஞரால்
பாரிய கொலைக்குள்ளானார் .

அவர் பூமியெல்லாம் யாருமற்ற பூமியாய்க் காட்சி
கொடுக்கையில் காவல் அற்ற வன்னிமக்கள் கானகத்து
விலங்காகிகூறு கெட்ட காந்திதேச மைந்தர் சதியால்
மரிக்கிறார் தினம் தினம் ஆயிரம் ஆயிரமாய்-

நீதி அற்ற அய்நா மன்றம் மூச்சற்றுநாவிழந்து ஊமை
யானதால்தீம்பு வரும் அச்சம் அற்றுஆட்டம் போடுகிறான்
வீம்பு பிடித்த கோதப்பய ராஜபச்சே

காலம் மாறும் புலி வீரர் பழிதீர்ப்பார் எனப்புகலும் எம்
மக்களின் மன ஆவல் என்றுதீரும் எனச்சொல்வாய் என்
ஆருயிர் அன்புத்தோழா.

மானத்தமிழன்

மானத்தமிழர் எல்லாம் கெஞ்சி
அழுதும் நீ மனமிரக்கம் இன்றி
மௌனித்தாயே. தானைத்
தலைவன் என்ற சொல்லுக்காய்
ஈழத்தலைவனை கொன்றொளித்
தாயா?

பாலுக்கும் பட்டு மெத்தைக்கு மாய்
பார் புகழ் மானத் தமிழனை கொன்ற
நீ வாரப்போகும் வாழ்வு எத்தனை
நாளுக்கென்று வாய் திறந்து செப்பு
நீதிக்கெல்லாம் சமாதி கட்டிய
கருணாநிதியே.

Tuesday, July 14, 2009

காமத்தின் பரிசு

காலமெல்லாம் காமசுகம்
திளைத்திடும் கருத்தியலால்
காளையரும் கன்னியரும்
காத்திடவெண்டிய முன்னறி
தெய்வங்களை கடத்துகிறார்
அனாதை இல்லம் நோக்கி
யாரும் அற்ற பாவிகளாக
யா அரும் அற்று கன்னியவள்
தனித்திருந்தால் வேண்டா
உறவு வரும் வேசித்தனம்
வேகமெடுக்கும் இப் பூமி
தன்னில் பாவிப்பயல் போற
இடம் பாதாள இரயில் தடமோ.

வாழ்க்கை

வாழ்க்கை என்பது ஒரு தொழிற்சாலை- அதில்
கணவன் மனைவி தான்எஜமான்கள்- அவர்தம்
குழ்ந்தைச்செல்வங்கள்தான் வரும் லாபம்
லாபம் பெருகிட உருண்டோடும் வருடம்பல
வருடம் உருண்டோட வயது பல கூடிடுமே
வயது பல கூடக்கூட இழமை மிக செலவாகும்
இழமை செலவாக செல்வங்களின் விவாகம்
கை கூடும்
விவாகம் கைகூட் முதுமை கோலொச்சும்
முதுமை கோலொச்ச இயலாமை துதி பாடும்
இய்லாமை துதி பாடத் தாம்பத்தியம் பலியாகும்
தாம்பத்தியம் பலியாகச் சிவன் தேடல் பிறப்பெடுக்கும்
தேடல் பிறப்பெடுக்க துறவறம் முனை பெறும்
துறவறம் முனைபெறப்பாசம் அறுபடும்
பாசம் அறுபட ஆறுபடைவீடுவாசமாகும்
படை வீடு வாச மாகமுற்றுபெறும் இல்வாழ்க்கை.

Friday, July 3, 2009

கலியுக வீமன்

பொங்கும் எழிற் சோலை தனில் புத்தம்
புது மலரது கண்டேன் போதை ஊட்டும்
அதன் எழிலில் என் மனதைப் பறி
கொடுத்தேன் இனபத் தமிழகத்தின்
இணை யில்லாத் தேவா என் அன்புக்
காணிக்கையாம் அம்மலரது தந்தேன்.