Friday, July 31, 2009

பாடலா அது

பாட்டொன்று கேட்டேன்
பேச்சற்றுப் போனேன்
பேரிடி பெற்றேன்..பாடலா அது

என்னென்ன சொன்னான்
எப்புத்தப்பா சொன்னான்
பொருள் அற்றுச்சொன்னான்..
பாடலா அது

யார் யாரோ கட்டுறான்
சீர் அற்றுக் கட்டுறான்
பாட்டென்று கட்டுறான்..
பாடலா அது

கத்திறான் கத்திறான்
காதொடியக் கத்திறான்
கந்தசாமி கத்திறன்..பாடலா அது

கேட்கிறான் கேட்கிறான்
நாதி அற்றவன் கேட்கிறான்
பாடலென்று கேட்கிறான்..
பாடலா அது.

[ Recently south Indian Tamil
film's songs has no lyrical
precision in composing
songs]

No comments:

Post a Comment