Tuesday, August 11, 2009

புத்தன் என்ன சொன்னான்.

புத்தன் என்ன சொன்னான்
மகிந்தனே எண்ணிப்பார்
சாந்தம் கருணை காருண்யம்
என்றான் கவுதம புத்தன்
கொலை கொள்ளை கற்பழிப்பு
என்றான் கலிகாலப்புத்தன்
புலால் உண்ணாமை சிறந்த தத்தும்
என்றான் போதிமரப்புத்தன்
புலாலாகத்தமிழனைத்தின்பேன்
என்றான் புரட்டுப்புத்தன்
அரச முடியைத்துறந்து துறவறம்
போனான் ஆரியவம்ச சூரியக்குஞ்சு
அரசுரிமை தனி உடமை என் வம்சம்
அரசாளும் என்றான் பேரினவாதக்குஞ்சு
பரம்பரைக்கட்டமைபை வெட்டிச்
சாய்த்தான் சித்தார்த்தன்
பரம்பரைக்காய் களை எடுத்தான்
தன் கூட்டில் கரவலைப்புத்தன்
யார் புத்தன் யாரானாலும்
கோள் கொல்லும் காலம் வரும்.

1 comment:

வெத்து வேட்டு said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment