Sunday, July 19, 2009

இறைவன் இருக்கிறானா

நட்டநடுக் காட்டில் நாலு பக்கம் வேலிகட்டி
கொட்டக் கொட்ட விளித்துக் காவல் புரியும்
இஷ்டப்படி சுட்டுத்தள்ள உரிமை பெற்ற
இலங்கை இராணுவம்.கஷ்டப்படு நன்றாக
கஷ்டபடுஎனச்சபிக்கப்பட்ட ஈழ்மக்கள்
இரக்கப்பட யாரும் அற்ற நிலைகண்டு
பொங்கி எழுந்த புலம் பேயர்ந்த தமிழ் மக்கள்
காப்பாற்று காப்பாற்று எனக்கேட்டபோதும்
கண்டும் காணாது போல் நடித்த பன்னாட்டு
அரசு அதிகாரிகள் அயல் நாட்டுச்சந்தைக்காய்
ஆதர்வுக்கரம் நீட்டத்தயங்கும் ஒபமா நிர்வாகம்
ஏதும் அறியா முள் வேலிக்குள் பொங்கி அழும்
ஏழைக்கண்ணீரால் கட்டப்பட்டநீச்சல் தடாகம்
பசிக்கொடுமையால் பலியாகும் பச்சிளம் பாலகர்
மூச்சற்றுப் போகும் முகமறியா முதியோர்கள்
காவல் நாயால் கற்பழிக்கப்பட்ட இளம் கன்னிகள்
இத்தனை நடந்தும் எதிர் வினை விளைவிக்காத
இறைவன் என்றொருவன் இருக்கிறானா எனச்
சொல் என் அன்புத்தோழா

No comments:

Post a Comment