Thursday, July 23, 2009

[பத்தர் கூட்டம்]

கோவில் மணி ஓசை கேட்டுக்
கோவில் போகும் ஒரு கூட்டம்
காலை வேளைப்பூசை காணும்
ஆவலில் கூடும் ஒரு கூட்டம்
மேள தாளத்துடன் தூங்கு
காவடியுடன் போகும் ஒரு கூட்டம்
ஆடல் பாடலுடன் ஓதுவார்கள்
பின் போகும் ஒரு கூட்டம்
எத்தனை கூட்டங்கள்
எங்கெங்கு கூடினும் அத்தனையும்
முருகன் பத்தர்கள் கூட்டம்.

No comments:

Post a Comment