Wednesday, July 22, 2009

[கோபம் ஒரு சத்துரு]

சினம் தரும் அழிவுகளை
அறிந்தவர்கள் ஒரு சிலரே
சினம் கொண்ட மனதிற்கு
மன அழுத்தம் குருதி அழுத்தம்
அத்தனையும் அதிகரித்து
மன நலனும் உடல் நலனும்
விரைவாகச் சீர்கெடுமே
மன்னிப்பதும் மறப்பதுவும்
நடந்துவிட்டால் ஏறியவை
இறங்குவதுவும் சீர்கெட்ட
உடல் நிலையும் மன நிலையும்
சீர் பெற்று உயர்வடையும்
எனத்தப்பாமல் சொன்னாரே
இக்காலப் பல அறிஞர்.

[ Anger is the destroyer of all
relationships. ]

No comments:

Post a Comment