Tuesday, September 1, 2009

[ விடையை யார் தருவார் ]

அப்பப்பா என்னே பயங்கரக் கொடுமை
தப்பு என்ன செய்தான் ஈழத்தமிழன்
உரிமையைத் தவிர வேறு எதைக் கேட்டான்
உலகில் நீதி செத்து தர்மம் அழிந்தது ஏன்
தார்மீகப்பேச்சு வெத்துவேட்டுப்பேச்சுத்தானா
பாரில் முதன்மை பெற்றது வியாபார சிந்தைதானா
ஈழத்தமிழனின் உயிர் மதிப்பற்றுப்போனதேன்
விட்ட தவறுகளை நோர்வே திருத்திக்கொள்ளுமா
மீளாத்துயிலிலிருந்து அய்நா மீண்டெழுமா
அமெரிக்கா தலைமத்துவத்தை நிலைநிறுத்துமா
ஆறாத்துயரிலிருந்து தமிழன் மீட்சி பெருவானா
ஆயிரம் வினாக்கான விடையை யார் தருவார்?

2 comments:

கரவைக்குரல் said...

ம் நீங்கள் கேட்கும் கேள்விகள் நியாயமானதே?
ஆனால் இவையெல்லாம் எப்போது எல்லோர் காதிலும் விழபோகிறதோ என்பது தான் தெரியவில்லை

விடை தெரியாத கேள்விகளுகளுடன் நாம் எல்லோரும்
உங்கள் கவிதைப்படைப்பு நன்று

M.Thevesh said...

கரவைக்குரல் உங்கள் வரவுக்கும் கருத்துகளுக்கும்
மிக்க நன்றிகள்.

Post a Comment