Monday, August 3, 2009

[தமிழீழ வரலாறு]

சுயம் இழந்த தமிழர்கள்
சம உரிமைக்களம் அமைத்தார்.
பெரும் பான்மைத் திமிராலே
சிறுபான்மைக் கெதிரானான்.
தமதுரிமைப் போருக்காய்
படைசேர்த்தான் தமிழ்தலைவன்.
சுயலாபம் தலை தூக்க உள்
நுளைந்தான் அயல் நாட்டான்.
நரிக் கணக்கைச் சரிசெய்யப்
புறப்பட்டான் கரிகாலன்.
தனி அரசுக் கனவுகளால்
களம் சேர்ந்தான் பல இளவல்.
புறநாநூறுக் கதை எழுதிப்புகழ்
பூத்தான் தமிழ்த் தலைவன்.
அயல் நாட்டுப்பெருங்கனவு
பகல் கனவாய் ஆனதனால்.
தனிநாட்டுக்கட்டமைப்பைக்
கலைத்தழிக்கக், களம் புகுந்தான்
காந்தி தேசக்கொலைகாரன்.
பெரும்பான்மைத்தோழனுக்காய்
நிதி கொடுத்து மதி கொடுத்து
கடைசியில் அய்நா வில்
குரல் கொடுத்து
அழித்தொழித்தான் நிஜமாகும்
தமிழ் ஈழ தனி அரசை.

[ India is one of the country that
crushed the aspirations of the
Eelam Tamils]

No comments:

Post a Comment