Saturday, August 8, 2009

[நீ சொல்லுவாய் கிளியே]

மனம் என்னும் மேடையிலே
தினம் ஆடும் மா மயிலே-உன்
இதமான காதல் கண்டும்
சதம் போட முடியல்லே-என்
மனம் மெல்லாம் குருதி மழையிலே
இனம் சனம் மரணக்குழியிலே
புனர்ஜன்மம் பிறக்குமா
புதுக்குடில் ஏகுமா ஏகமாய்
பசிப்பிணி தீருமா தீற்கமாய்
துணி அணி சேருமா நேர்மையாய்
நிர் பய வாழ்வு நிலைக்குமா
இப்பரிதவிப்புத்தான் தீருமா- உன்
கைத்தலம் பற்றுவேனா யார்
சொல்லுவார் நீயே சொல் கிளியே.

2 comments:

Unknown said...

மிகத்தெளிவாக ஈழத்தமிழனின் மனதில் உள்ளதை அப்படியே குறிப்பிட்டுள்ளீர்கள்

M.Thevesh said...

suba said...

மிகத்தெளிவாக ஈழத்தமிழனின் மனதில் உள்ளதை அப்படியே குறிப்பிட்டுள்ளீர்கள்

உங்கள் வரவுக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல

Post a Comment