Thursday, December 31, 2009

புத்தாண்டே வருக நிம்மதியைத்தருக

கழிகின்ற2009ம் ஆண்டு
காலனின் ஊழிக்கூத்தை
கனகச்சிதமாய் ஆடவைத்து
கலைந்து போகிறது.
வரும்2010ம் ஆண்டு
வலிகளைக்கழைந்து
புதியநம்பிக்கைகளை
ஈழத்தமிழன் வாழ்வில்
ஒளியேற்றும் ஆண்டாக
மலரவேண்டும் என்ற
ஆவல் எல்லோரதும்
எதிர்பார்ப்பாய் ஆகிறது
யாவருக்கும் என்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.