Thursday, August 13, 2009

[இன்னும் ஏன் தமிழன் மாறவில்லை]

ஆண்ட இனமாம் தமிழ் இனம்- இனி
மீண்டும் ஆளும் நிலை தோன்றுமா
வேண்டும் நிலைகுலையாத் தலைமை ஒன்று
தாண்ட எதுவித தடைகள் வரினும்
ஓங்குக புலம்பெயர் தமிழர் ஒற்றுமை
அங்காங்கே சில எட்டப்பர் தோன்றினும்
பாங்காக எமது உரிமைகள் உணர்ந்தால்
வீம்புக்காய் ஒலிக்கும் எதிர் குரல் மதிப்பற்று
மழைக்காலக் காளான் போல் மறையுமே
ஒன்றுபட்டால் உலகில் தமிழ் அரசு
குன்றில்இட்ட ஒளி விளக்காய் ஒளிருமே
ஒன்று படுவோம் ஒற்றுமை காப்போம்
ஒரு லட்சம் உயிர் பலிக்குரிய நீதிக்கு
உலக மன்றில் உரத்துக்குரல் ஒலிப்போம்
வேண்டுவது ஒற்றுமை ஒன்றே- தமிழா
வீம்பை ஒறுத்து மனந்திறந்து சிந்திப்பாயா?

No comments:

Post a Comment