Sunday, July 19, 2009

காக்க யார் வருவார்

நட்டநடுப்பகலில் நாலகலம்
வீதியிலேஇஷ்டப்பட்டுத்
துகிலுரியப்புறப்பட்டான்
இத்துஷ்டன்

தட்டிக்கேட்கநாதி இல்லா
இந்நாட்டில்தட்டிக்கேட்ட
குணமகனைக்கொன்று
விட்டார் எட்டப்பர்கூட்டங்கள்
ஒன்று சேர்ந்து.

கட்டைப்பஞ்சாயத்து காமக்
களியாட்டம்கொடிகட்டிப்
பறக்கும் இந்நாட்டில்
நீதி செத்து நெடுநாளாய்
போனதனால்.

குன்றில்குமரன் மனம்
வெறுத்துவேற்றுக்கிரகம்
குடிபுகுந்தான்அதனால்
இப்போ எம்மைக்காக்க
யார் வருவார் கச்சி
ஏகம்பரே.

No comments:

Post a Comment