கற்பது நிற்பதில்லை என்னாளும்
கற்றது கைமண் அளவு கல்லாதது
உலகளவு என்று தப்பாமல் சொன்னாரே
கற்க்கால அவ்வைக்கிழவி.
இக்கால இளைஞரிடம் கற்பதற்கு
பல வுண்டு.முன்பு கற்றதெல்லாம்
முதியவரின் கடந்த கால அனுபவமே.
புதியவை கற்பதினால் மனஞாலம்
விரிவாகும் புத்துணர்ச்சி தலை
தூக்கும். கற்காத கணணி அறிவு
கற்பதினால் வலைத்தேடல் சுலப
மாகும் விஞ்ஞானம் தொழில்
நுட்பம் புலனாகும்.
இளம் உள்ளம் அனுசரிக்கும்
நட்புணர்வால் பல வருடம்
பின்னோக்கிப்போவீரே.
மனநலனும் உடல் நலனும்
முன்னேறும் வீண் வம்பளக்கும்
வயோதிபர்மடம் காலியாகும்.
இளவலுடன் புரிதலுடன்
நட்பு றவு ஏற்பட்டால்
மேற்ச்சொன்ன எல்லாமும்
நிஜமகும் என்பதை உணர்வீரே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment