Monday, August 24, 2009

[சுதந்திரம் யார் பெற்றார்]

சுதந்திரம் என்பது வெறும் வார்த்தைதானா
அன்று சூரியன் அஸ்தமிக்கா ஏகாதிபத்தியத்தின்
அடிமையாக இருந்தோம்
இன்று டெல்லிவாலாக்களின் ஏதேச்சாரத்திடம்
அடிமையாக இருக்கிறோம்.

தண்ணிரைத்தடுக்கும் அண்டை மாநிலக்காரனை
தட்டிக்கேட்க உரிமை இல்லாச் சுதந்திரம்
டெல்லியைத் தட்டிக்கேட்க தார்மீகவலுவற்ற
கொள்ளைகாரர் கையில் திறவு கோல்
கொடுத்த சுதந்திரம்

வேட்டிக்கும் சேலைக்கும் சோரம் போய்
வோட் போடும் சுதந்திரம்
சுதந்திரம் பெற்றோம் துகிலுரியப்பட்டோம்
அம்மணமாய் நிற்கிறோம் எமக்கெங்கே
இருக்கிறது சுதந்திரம்

தமிழர் சுதந்திரம் பெற்றார்களா?....
ஏமாந்த தமிழினமே ...
சிந்தித்துப்பார்.

No comments:

Post a Comment