Sunday, September 20, 2009

ஏன் இந்தமோகம்

சினிமா மோகம் ஆட்டிப்படைப்பதால்
சீர் அற்றுப் போகிறது பல இளைஞர் வாழ்க்கை
கனவுத்தொழிற்சாலையின்மயக்கத்தால்
கனவாகிப்போன வாழ்க்கைதான் எத்தனை
ஒரே ஒரு திரையில் தோன்றும் கனவுக்காய்
ஒளிமயமான எதிர்காலத்தை அழித்தவர் எத்தனை
இளமைத்துள்ளலுடன் ஓடிவரும் இளவல்கள்
இளமையைத்தொலைத்து யார் யாருக்கோ அடிமையாய்
தாடி நரைத்து ஒட்டியவயறுடன் ஒரு சான்ஸ்சுக்காய்
வாடிச்சருகாய் சாலையோரம் வந்தவர் எத்தனை
பகட்டு வாழ்வினால் பயித்தியமான இளைஞர்களே
திகட்டும் சினிமா ஆசை தரப்போவது எதுவுமில்லை
நினைத்து மனம் வருந்துவதைத்தவிற்க இன்றே
நிலையான கல்வி நிகரற்ற பட்டங்களைத் தேடி
நிலையான வாழ்வுக்காய் களம் அமையுங்கள்.

2 comments:

Unknown said...

தொடர்பதிவொன்றிற்கு அழைத்திருக்கிறேன்...

http://tamilgopi.blogspot.com/2009/10/blog-post_03.html

வாருங்கள்...
அப்படியே அன்புப்பரிசையும் பெற்றுக் கொள்ளுங்கள்...

M.Thevesh said...

வருகைக்கும் அழைப்புக்கும் நன்றிகள்.

Post a Comment