Sunday, August 9, 2009

[காதல் யாசகம்]

பூவிலான பெண்மணி-என் மீது
காதல் கொள்ளடி மின்மினி
காதல் இல்லா வாழ்விலே
சாதல் நன்று இப்பாரிலே

காணும் காட்சி யாவுமே
களிகொள் மனதாய் மாறுமே
பேசும் வார்த்தைகள் யாவுமே
நேசம் கலந்ததாய் ஒலிக்குமே

கற்ற பாடங்கள் எண்ணிலா
முற்றுமழித்த கண்ணிலாள்
கனவு காணும் என்னிடம்
காதல் கொள்ளடி மின்மினி

மாலை சூடி மனை புகும்
வேளையில் காதல் கொள்ளடி
என்னவளே காதல் கொள்ளடி
கனிமொழியே காதல் கொள்ளடி.

1 comment:

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....



தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

Post a Comment