Saturday, July 25, 2009

[சீர்கேட்கும் அவலம்]

இளம் மனதின் ஆசையெல்லாம்
சிலை வடிவம் பெற்றதில்லை
சிலை வடிவம் பெற்றதெல்லம்
கலைச்செல்வம் ஆனதில்லை

தலை மகனாய் அவதரித்தால்
தனியாசைக் கிடமில்லை
தாய் ஆசைப் படடோலை
சேய் ஆசையைச் சுட்டெரிக்கும்

பேராசைப் பெற்றவளால்
சீர்கெட்டது பல குடும்பம்
நூல் படித்துத் தலை நிமிர்ந்த
இக்கால இளவலுக்கு
சீர் கேட்டுச் சமர் பிறக்கும்
கற் காலப் பண்பாடு
எக்காலம் பலியாகும்
தப்பாமற் சொல்லுங்கள்
முக்காலம் உணர்ந்தவரே.

[பட்டோலை=நீணடகோரிக்கை.
கற்காலம்= பழையகாலம்
முக்காலம் உணர்ந்தவர்= கடவுள்]

{Asking Dowry destroy the
happiness of the couples}

2 comments:

வலசு - வேலணை said...

கருத்தாழம் மிக்க கவிதை. வாழ்த்துக்கள்

M.Thevesh said...

வலசு - வேலணை said...

கருத்தாழம் மிக்க கவிதை. வாழ்த்துக்கள்
August 7, 2009 8:11 PM
உங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் நன்றி.

Post a Comment