Wednesday, June 24, 2015

அறம் காத்த மண்ணின் மைந்தர்கள்
புடம் போட்டு தூய்மை காத்தார்கள்
தடம் மாறாத இளைஞர் கூட்டம்
தமிழருக்கு பெருமை சேர்தார்கள்
தட்டிக்கேட்கும் தம்பிகள் எல்லாம்
தரணி விட்டுப்போனதாலே எம்
பண்பாட்டுக்கோலங்கள் பல
பாழ்பட்டுப்போயினவே இந்
நாட்டு மக்கள் எல்லாரும் மேல்
நாட்டு மக்களாயினரே- காம
சுகம் தேடும் கூட்டம்- போதை
சுகம் தேடும் மைனர்கள்
கோலோச்சும் காலமாயிற்ரே
அப்பா அறியாச் செல்வங்கள்
அம்மா வளர்கும் செல்வங்கள்
அணைக்க ஆளில்லா செல்வங்கள்
அனாதை எனப்பெருகினரே
கற்கை நெறியைக் கடலில் கரைத்தனரே
சீர்கெட்ட தமிழர் சமுதாயம்
ஏற்றம் பெறுமா எம் வாழ்நாளில்
தோற்றம் பெறும் கேள்விக்கெல்லாம்
விடை தாராய் நல்லூர் உறை கந்தவேழே


Tuesday, July 20, 2010

மனிதா உனக்குத்தேவைதானா

தாம்பத்தியம் தறிகெட்டுப்போனால்
தனிமை இனிமையான தீர்வாகிறது
தவிக்கிற மனது தனிமைக்கஞ்சி
தனிமையைத்தவிற்கவே-மனிதன்
தன் மானம் இழந்தாலும் தாரத்தின்
வழிபோகிறான்
மதிப்புக்கெட்டுப்போன வாழ்வு
அவனை
நடைப்பிணமாக்கிறது இறுதியில்
சுடுகாட்டுக்குவிரட்டுகிறது
மனிதா இவ்வாழ்க்கை உனக்குத்
தேவைதானா?

Friday, July 16, 2010

ஓர் தந்தையின் ஆசைக்கனவு.

வாழ்கையில் நீ பல வளங்கள் பெற்றாக வேண்டும்
ஈடில்லாப் பட்டங்கள் உனை வந்தடையவேண்டும
காதல் வாழ்வில் கற்கண்டுச் சுவை கூட்டவேண்டும்
இல்லத்துச்சிம்மாசனம் உன் உரித்தாக வேண்டும்
உன்மெத்தென்ற மடியில்இரு செல்வங்கள் படுத்
துறங்கவேண்டும்
நீ தொட்டதெல்லாம் பொன்னாக ஒளிபெறவேண்டும் -
நான் கிட்ட இருந்து பார்த்து மனமகிழவேண்டும்

Thursday, December 31, 2009

புத்தாண்டே வருக நிம்மதியைத்தருக

கழிகின்ற2009ம் ஆண்டு
காலனின் ஊழிக்கூத்தை
கனகச்சிதமாய் ஆடவைத்து
கலைந்து போகிறது.
வரும்2010ம் ஆண்டு
வலிகளைக்கழைந்து
புதியநம்பிக்கைகளை
ஈழத்தமிழன் வாழ்வில்
ஒளியேற்றும் ஆண்டாக
மலரவேண்டும் என்ற
ஆவல் எல்லோரதும்
எதிர்பார்ப்பாய் ஆகிறது
யாவருக்கும் என்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Friday, November 20, 2009

நவம்பர் 27ல்

இளமையைஅழித்துச்சாவினைஅணைத்த
மாவீரரை நினைவுகூருவோம்
ஈழத்தமிழரின் விடிவுக்காய் தம் கல்வியை
கைவிட்டமாவீரரைநினைவுகூருவோம்
எதிரியிடமிருந்து மண்ணையும்
மககளையும்காக்கவெந்துஆகுதியான
மாவீரரைநினைவுகூருவோம்
காமத்தைஅழித்து சாவின் குப்பியை
சுமந்த அம்மாவீரரைநினைவுகூருவோம்
வலிமைமிக்க தமிழர் படையை அழித்த
வல்லாதிக்கநாட்டால் மண்ணோடு
மண்ணான பல் ஆயிரம் சாவுக்கஞ்சா
மாவீரரை நினைவுகூருவோம்
நவம்பர் இருபத்தேளில் சாவினைத்
தழுவிய சந்தணமேனியரை
நினைவுகூருவோம்.

Monday, November 16, 2009

எங்கே கழுவுவாய் இந்தியாவே?

அடிப்படை உரிமைகாய்
களங்கண்ட ஈழத்தமிழரைக்
காரணமின்றி அனியாயமாக
அழித்தொழிக்க ஆரவாரம்
இல்லாமல் தோள் கொடுத்த
அயல்நாட்டுக்காரனே- உன்
கையில் நனைந்த ஈழ்த்
தமிழர் இரத்தத்தை
காயுமுன் களுவ எங்கு
செல்லுவாய் என்று
கூறுவாய் தும்பை விட்டு
வாலைப்பிடித்துள்ள
இத்தாலிய நாட்டுச்சிங்காரியின்
காலைக்கழுவும் அகில இந்திய
இல்லை இல்லை இஸ்லாமிய
காங்கிரஸ் கழுதைக்கூட்டங்களே.

Thursday, October 8, 2009

புதியவை கற்றல்

கற்பது நிற்பதில்லை என்னாளும்
கற்றது கைமண் அளவு கல்லாதது
உலகளவு என்று தப்பாமல் சொன்னாரே
கற்க்கால அவ்வைக்கிழவி.
இக்கால இளைஞரிடம் கற்பதற்கு
பல வுண்டு.முன்பு கற்றதெல்லாம்
முதியவரின் கடந்த கால அனுபவமே.
புதியவை கற்பதினால் மனஞாலம்
விரிவாகும் புத்துணர்ச்சி தலை
தூக்கும். கற்காத கணணி அறிவு
கற்பதினால் வலைத்தேடல் சுலப
மாகும் விஞ்ஞானம் தொழில்
நுட்பம் புலனாகும்.
இளம் உள்ளம் அனுசரிக்கும்
நட்புணர்வால் பல வருடம்
பின்னோக்கிப்போவீரே.
மனநலனும் உடல் நலனும்
முன்னேறும் வீண் வம்பளக்கும்
வயோதிபர்மடம் காலியாகும்.
இளவலுடன் புரிதலுடன்
நட்பு றவு ஏற்பட்டால்
மேற்ச்சொன்ன எல்லாமும்
நிஜமகும் என்பதை உணர்வீரே.

Monday, October 5, 2009

யார் அறிவார்

மூத்தபிள்ளைதான் மொக்குப்பிள்ளை
என்பார் அறியாதார்.
தந்தைக்குத்தோழ்கொடுப்பவனும்
இவனே
தம்பி தங்கைக்காய் உழைத்துக்கொடுப்
பவனும் இவனே
21 வயதில் இன்பம் காணும் தந்தை 35
வயது வந்தும் தனிமரமாய் நிற்க வைப்
பவனும் இவனே
மற்றவர் விருப்பு வெறுப்புக்கு மதிப்புக்
கொடுத்து தன்னை ஒறுக்குவனும்
இவனே
தம்பிமார் உயர தங்கைமார் வாழ்க்கைப்
பட எல்லாமானவன் உயராது ஏழ்மையில்
உழல்பவனும் இவனே
சமுதாயத்தின் குற்றச்சாட்டுக்குப்பதில்
சொல்லநிற்ப்பந்திக்கப்பட்டவனும் இவனே
இந்த பாழ்பட்ட சமுதாயம் என்று மாறும்
காயம்பட்டமூத்தவன் என்று மீள்வான்
யார் அறிவார்?

Sunday, September 20, 2009

ஏன் இந்தமோகம்

சினிமா மோகம் ஆட்டிப்படைப்பதால்
சீர் அற்றுப் போகிறது பல இளைஞர் வாழ்க்கை
கனவுத்தொழிற்சாலையின்மயக்கத்தால்
கனவாகிப்போன வாழ்க்கைதான் எத்தனை
ஒரே ஒரு திரையில் தோன்றும் கனவுக்காய்
ஒளிமயமான எதிர்காலத்தை அழித்தவர் எத்தனை
இளமைத்துள்ளலுடன் ஓடிவரும் இளவல்கள்
இளமையைத்தொலைத்து யார் யாருக்கோ அடிமையாய்
தாடி நரைத்து ஒட்டியவயறுடன் ஒரு சான்ஸ்சுக்காய்
வாடிச்சருகாய் சாலையோரம் வந்தவர் எத்தனை
பகட்டு வாழ்வினால் பயித்தியமான இளைஞர்களே
திகட்டும் சினிமா ஆசை தரப்போவது எதுவுமில்லை
நினைத்து மனம் வருந்துவதைத்தவிற்க இன்றே
நிலையான கல்வி நிகரற்ற பட்டங்களைத் தேடி
நிலையான வாழ்வுக்காய் களம் அமையுங்கள்.

Monday, September 14, 2009

[ காதல் சுகமானது ]

காதல் என்பது ஒரு சுகமான அனுபவமே
காதல் வருவதும் வாழ்வில் ஒரு முறைதானே
காதல் பல வருமானால் அது காம உறவுக்கானதே
காதல் தோற்கினும் பழிவாங்கல் தோன்றுவதில்லையே

ஆணின் காதல் மனதைவிட்டு என்றும் அழிவதில்லை
பெண்ணின் காதல் மன ஆழத்தில் உறங்கிவிடும்
உண்மைக்காதல் எல்லாம் மணமேடை ஏறுவதில்லை
கண்டதும் காதல் பெரும்பாலும் ஒருதலைக் காம உணர்வே

காதலுக்காய் நினைவாலயம் அமைத்தான் சாஜகான்
காதலுக்காய் முடி துறந்தான் எட்வேட் மன்னன்
காதலுக்காய் கல்லறையில் சமாதி ஆனான் ரோமியோ
காதலுக்காய் உயிர் கொடுத்தான் அம்பிகாபதி

எங்கிருந்தாலும் அவள் வாழநினைப்பது காதலே
மங்கையின் நிலைக்காய் மனம் வருந்துவதும் காதலே
சங்கையீனம் வராமல் தடுப்பதும் உண்மைக்காதலே
தங்கையாய் மதித்து மலர் சொரிவதும் காதலே.

Tuesday, September 8, 2009

நட்புக்குத்துரோகம்

மனமறிந்து பாபம் எதுவும் செய்யவில்லை
கனமான வார்த்தைகளை எதிர்பார்க்கவில்லை
நிலையான குடும்ப பாரம்பரியத்தின் வாரிசு
விலைமதிப்பில்லா பெற்றோரின் நடுப்பையன்

தனியானவழிசமைத்து முறையாக கட்டிஎழுப்பிய
பலமான வியாபார சாம்ராஜ்யம் எனது சாம்ராஜ்யம்
கனிவான மனநிலையால் இலகுவாக பங்காளியானான்
நிலையான வாழ்வற்ற ஏழைக்குடும்பத்தலைமகன்.

வருடங்கள் ஓடின பங்காளியை மணமகனாக்க இனிமையான
குடும்ப உறவை துரிதமாகச் சமைத்துக்கொடுத்தான்
சாம்ராஜ்யத்தின் தலைமைக்கர்த்தா நடுப்பையன். நன்றிகள்
பலமாய்ச்சொன்னான் தாம்பத்திய்த்தில் நுளைந்த தலைமகன்.

நாடு கொந்தளித்தது இனங்கள் அழியத்தொடங்கின- வேற்று
நாட்டு மகள் மங்கல மங்கையானதால் பாதுகாப்புக்கு கேடு வருமுன்
நாடு விட்டு தாய் நாட்டுக்கு மங்கையை அனுப்ப நாள் குறித்தான்
தூய நட்புக்கு உயிர் கொடுக்கும் குணக்குன்று நடுப்பையன்.

நண்பன் கையில் சாம்ராஜ்யத்தின் திறவு கோல் திறம்பட
வியாபாரம் நடைமுறைக்குத்தோழ்கொடுக்க காலம்
காலமாய் பயிற்சி அளித்து உருவாக்கிய காசாளன். இவனுக்கு
உதவிட இளவல் ராஜுஎனப்பெயர் கொண்ட என் உயிர் நண்பன்

இன்று செய் நன்றிகளெல்லாம் மறந்து பண்புகள் காற்றோடுபோய்
நண்பனென நம்பி அளித்த எனது சாம்ராஜ்யத்தை தனது தனி
உடமை யாக்கி நடந்து வந்த வழி மறந்து சொன்ன சொற்களை
அழித்து சுயநலம் பெரிதாகி யார் நீ இந்த வியாபார சாம்ராஜ்யத்திற்கு
என என்னைக் கேள்வி கேட்கிறானே முருகா நீதியை நீயே சொல்

Friday, September 4, 2009

[ பாவிப்பயல் ]

அன்று பாட்டன் பூட்டன் போட்டசாதி விலங்கால்
மனிதரை மனிதராய் மதிக்கமறந்தோம்
பாகுபாட்டைக் கையில் எடுத்தோம்
வலிகளைக்கொடுத்தோம் திருந்தமறுத்தோம்
இன்று மெலியார் அதிகாரத்தில் மாற்றான்கை
கோர்க்கையில் மறுதலிக்கிறோம்
மனம் வெதும்புகிறோம் உரிமைக்கு கைகொடு
எனக்கேடகிறோம்
பட்டவலி அடிமனதில் எழுகையில் அதிகாரஞ்
செய்திடத்துடிக்கிறது மனது அதனால்
நீதி சாகிறது நிர்மூலமாகிறது தமிழ் மண்
பாவிப்பயல் மாறுவானா பாவப்பட்டமக்கள்
மீளுவாரா கர்த்தரே கருணை காட்டும்

Tuesday, September 1, 2009

[ விடையை யார் தருவார் ]

அப்பப்பா என்னே பயங்கரக் கொடுமை
தப்பு என்ன செய்தான் ஈழத்தமிழன்
உரிமையைத் தவிர வேறு எதைக் கேட்டான்
உலகில் நீதி செத்து தர்மம் அழிந்தது ஏன்
தார்மீகப்பேச்சு வெத்துவேட்டுப்பேச்சுத்தானா
பாரில் முதன்மை பெற்றது வியாபார சிந்தைதானா
ஈழத்தமிழனின் உயிர் மதிப்பற்றுப்போனதேன்
விட்ட தவறுகளை நோர்வே திருத்திக்கொள்ளுமா
மீளாத்துயிலிலிருந்து அய்நா மீண்டெழுமா
அமெரிக்கா தலைமத்துவத்தை நிலைநிறுத்துமா
ஆறாத்துயரிலிருந்து தமிழன் மீட்சி பெருவானா
ஆயிரம் வினாக்கான விடையை யார் தருவார்?

Thursday, August 27, 2009

[அற்புதவாழ்வு ]

பட்டப்படிப்பு படித்து என்ன...
கோட் சூட் அணிந்து என்ன...
பென்ஸ்ல் உலாவந்து என்ன...
சாப்பிடநேரமின்றி
தூங்க நேரமின்றி
குழந்தையைக் கொஞ்ச நேரமின்றி
தாம்பத்தியத்தைத்தொலைத்துப் பணம்
பணமென்று ஆலாய்ப்பறக்கும்
மனிதா
ஈற்றில்
நீ அடையப்போவதுதான்என்ன?!!!!
ஆசையைத்துறந்தால்
அற்புத வாழ்வைப்படைக்கலாம்.

Monday, August 24, 2009

[சுதந்திரம் யார் பெற்றார்]

சுதந்திரம் என்பது வெறும் வார்த்தைதானா
அன்று சூரியன் அஸ்தமிக்கா ஏகாதிபத்தியத்தின்
அடிமையாக இருந்தோம்
இன்று டெல்லிவாலாக்களின் ஏதேச்சாரத்திடம்
அடிமையாக இருக்கிறோம்.

தண்ணிரைத்தடுக்கும் அண்டை மாநிலக்காரனை
தட்டிக்கேட்க உரிமை இல்லாச் சுதந்திரம்
டெல்லியைத் தட்டிக்கேட்க தார்மீகவலுவற்ற
கொள்ளைகாரர் கையில் திறவு கோல்
கொடுத்த சுதந்திரம்

வேட்டிக்கும் சேலைக்கும் சோரம் போய்
வோட் போடும் சுதந்திரம்
சுதந்திரம் பெற்றோம் துகிலுரியப்பட்டோம்
அம்மணமாய் நிற்கிறோம் எமக்கெங்கே
இருக்கிறது சுதந்திரம்

தமிழர் சுதந்திரம் பெற்றார்களா?....
ஏமாந்த தமிழினமே ...
சிந்தித்துப்பார்.

Saturday, August 22, 2009

[காத்திரு காலச்சுவடு மாறும் நிலைவரை]

நேற்று நடந்த ஈழ உரிமைப்போரில்
மாண்டதமிழர் லட்சம் லட்சமாய்
நிராயுதபாணிகளாய் கேட்பார் அற்று.

ஒரு சின்ன இனக்குழுவை வேரோடழிக்க
ஒன்று பட்டது ஆசிய ஜொதி அமெரிக்கத்
தேவி சோசலிஸ்ற்வலையம் அகில உலகம்.

தனித் தனி நாடு தனித் தனி இனங்கள்
தலை எடுத்தாளச் சாமரம் வீசும் விந்தை
உலகம் தமிழன் முனையும் தனி நாட்டு
வாழ்விற்கு சென்னீர் ஊற்றும் முறைமை
புரியாப்புதிராம்.

ஆறு கோடித்தமிழர் வாழும் பூப்பந்துலகில்
தன்னைத் தானே ஆளத்தேவை ஒரு சிறு
நிலமே.

அய்நூறு ஆண்டுகால் அடிமை வாழ்வை
மீட்டிடத் திட்டம் போட்டான் கலிகாலக்
கரிகாலன்.

கொள்கைப்பற்று, நாட்டுப்பற்று,மொழிப்பற்று
தியாகப்பற்று எல்லாப்பற்றும் சங்கமித்து
களம் நிமிர்ந்தது ஈழமண் டலம்.

மூன்று சகாப்தம் முப்பரிமாணத்துடன்
கட்டம் கட்டமாய் காவியம் படைத்தான்
மானங்காத்த ஈழத்தமிழன்.

பாவியான பாரதத்துப் பேய் மகன் வேகமாய்த்
தொடுத்தான் சதிவலைப்பின்னலை.

ஈழத்தமிழனின் நிஜமாகி நிமிர்ந்த தனி
நாட்டரசை ஊழிக்கால நர்த்தனம் ஆடிச்
சிதைத்து அழித்தான் நீதி தேவனின்
தத்துப்பிள்ளை போல்.

மானத்தமிழன் மனக்குமுறலுடன் உறு மீன்
நிலை எடுத்தான் காலச்சுவடு மாறும்
நிலைக்காக.

[பாசம் எது வரை]

பெற்றவள் காட்டிடும் அற்புதப்பாசம்
தட்சணநாயகன் பற்றிடும்வரையாம்

அப்பன் போற்றிடும் புத்திரபாசம்
புத்திரன் மங்கையின் கைத்தலம்
பற்றிடும்வரையாம்.

அக்கையின் தங்கையின் அண்ணன்மேல்
பாசம் மட்டற்றசீர் தந்திடும்வரையாம்

அண்ணன்மார் தம்பிமார் கொட்டிடும்
பந்தமும் பாசமும் பண்டுப்பத்திரம்
செப்பிடும்வரையாம்

கட்டியமனையாள் காமக்கிளத்தியின்
காதலும் பாசமும் சட்டமுங்கட்டிலும்
ஆடிடும்வரையாம்

புத்திரன் புகழ்திடும் அப்பன் மேல்
பாசம் அப்பன் சொத்தினைப்பெற்றிடும்
வரையாம்

எத்தனை எதிர்வினை எற்பட்டபோதும்
ஈற்றினில்வருவது நட்பெனும் பாசப்பிணப்பாம்.

Monday, August 17, 2009

[ ஆண்டவா நீ இருக்கிறாயா?]

ஆண்டவா ஆண்டவா நீ இருக்கின்றாயா
நீ இருந்திருந்தால்மீண்டும் மீண்டும்
துன்பக்கேணியில் வீழ்த்தியிருப்பாயா
மாண்டவர்க்கெல்லம் நீகொடுத்தது
ஒரே விதியா-சின்னவாண்டுகள் செய்த
தவறுதான் என்ன ஆண்டவா அவர்கள்
கேட்பதெல்லாம்அன்பு பாசம்
அரவணைப்பு மட்டுமே
ஆண்ட உரிமையால் கேட்டதெல்லாம்
மீண்டும் தம்மை ஆழும் நிலை ஒன்றையே
பாண்டவர் போல் கேட்டது எம் இடம் மட்டுமே
வேண்டுபவர்கள் வேறு பட்டதால் ஆள்பவர்
பலம் பெற்றனரே
ஆண்டவா உன் மனம் இன்னும் இரங்கவில்லையே
ஆண்டு ஆண்டுகளாய் செய்த மாதவங்கள்
எல்லாம் தோற்கும் நிலை வந்துற்றதே
வேண்டுவதும் உன் அருள் ஒன்றையே-எம்மை
மீட்டிடும் இந்த துன்பக்கேணியிலிருந்து
மீட்டிடும் மருதமலையானே
மீண்டும் மீண்டும் தொழுகிறோம் மீட்டிடும்
எம்மை மீட்டிடும் மருதமலையானே

Thursday, August 13, 2009

[இன்னும் ஏன் தமிழன் மாறவில்லை]

ஆண்ட இனமாம் தமிழ் இனம்- இனி
மீண்டும் ஆளும் நிலை தோன்றுமா
வேண்டும் நிலைகுலையாத் தலைமை ஒன்று
தாண்ட எதுவித தடைகள் வரினும்
ஓங்குக புலம்பெயர் தமிழர் ஒற்றுமை
அங்காங்கே சில எட்டப்பர் தோன்றினும்
பாங்காக எமது உரிமைகள் உணர்ந்தால்
வீம்புக்காய் ஒலிக்கும் எதிர் குரல் மதிப்பற்று
மழைக்காலக் காளான் போல் மறையுமே
ஒன்றுபட்டால் உலகில் தமிழ் அரசு
குன்றில்இட்ட ஒளி விளக்காய் ஒளிருமே
ஒன்று படுவோம் ஒற்றுமை காப்போம்
ஒரு லட்சம் உயிர் பலிக்குரிய நீதிக்கு
உலக மன்றில் உரத்துக்குரல் ஒலிப்போம்
வேண்டுவது ஒற்றுமை ஒன்றே- தமிழா
வீம்பை ஒறுத்து மனந்திறந்து சிந்திப்பாயா?

Tuesday, August 11, 2009

புத்தன் என்ன சொன்னான்.

புத்தன் என்ன சொன்னான்
மகிந்தனே எண்ணிப்பார்
சாந்தம் கருணை காருண்யம்
என்றான் கவுதம புத்தன்
கொலை கொள்ளை கற்பழிப்பு
என்றான் கலிகாலப்புத்தன்
புலால் உண்ணாமை சிறந்த தத்தும்
என்றான் போதிமரப்புத்தன்
புலாலாகத்தமிழனைத்தின்பேன்
என்றான் புரட்டுப்புத்தன்
அரச முடியைத்துறந்து துறவறம்
போனான் ஆரியவம்ச சூரியக்குஞ்சு
அரசுரிமை தனி உடமை என் வம்சம்
அரசாளும் என்றான் பேரினவாதக்குஞ்சு
பரம்பரைக்கட்டமைபை வெட்டிச்
சாய்த்தான் சித்தார்த்தன்
பரம்பரைக்காய் களை எடுத்தான்
தன் கூட்டில் கரவலைப்புத்தன்
யார் புத்தன் யாரானாலும்
கோள் கொல்லும் காலம் வரும்.