Tuesday, July 20, 2010

மனிதா உனக்குத்தேவைதானா

தாம்பத்தியம் தறிகெட்டுப்போனால்
தனிமை இனிமையான தீர்வாகிறது
தவிக்கிற மனது தனிமைக்கஞ்சி
தனிமையைத்தவிற்கவே-மனிதன்
தன் மானம் இழந்தாலும் தாரத்தின்
வழிபோகிறான்
மதிப்புக்கெட்டுப்போன வாழ்வு
அவனை
நடைப்பிணமாக்கிறது இறுதியில்
சுடுகாட்டுக்குவிரட்டுகிறது
மனிதா இவ்வாழ்க்கை உனக்குத்
தேவைதானா?

Friday, July 16, 2010

ஓர் தந்தையின் ஆசைக்கனவு.

வாழ்கையில் நீ பல வளங்கள் பெற்றாக வேண்டும்
ஈடில்லாப் பட்டங்கள் உனை வந்தடையவேண்டும
காதல் வாழ்வில் கற்கண்டுச் சுவை கூட்டவேண்டும்
இல்லத்துச்சிம்மாசனம் உன் உரித்தாக வேண்டும்
உன்மெத்தென்ற மடியில்இரு செல்வங்கள் படுத்
துறங்கவேண்டும்
நீ தொட்டதெல்லாம் பொன்னாக ஒளிபெறவேண்டும் -
நான் கிட்ட இருந்து பார்த்து மனமகிழவேண்டும்