Friday, September 4, 2009

[ பாவிப்பயல் ]

அன்று பாட்டன் பூட்டன் போட்டசாதி விலங்கால்
மனிதரை மனிதராய் மதிக்கமறந்தோம்
பாகுபாட்டைக் கையில் எடுத்தோம்
வலிகளைக்கொடுத்தோம் திருந்தமறுத்தோம்
இன்று மெலியார் அதிகாரத்தில் மாற்றான்கை
கோர்க்கையில் மறுதலிக்கிறோம்
மனம் வெதும்புகிறோம் உரிமைக்கு கைகொடு
எனக்கேடகிறோம்
பட்டவலி அடிமனதில் எழுகையில் அதிகாரஞ்
செய்திடத்துடிக்கிறது மனது அதனால்
நீதி சாகிறது நிர்மூலமாகிறது தமிழ் மண்
பாவிப்பயல் மாறுவானா பாவப்பட்டமக்கள்
மீளுவாரா கர்த்தரே கருணை காட்டும்

No comments:

Post a Comment